நடு வீதியில் வாளுடன் அட்டகாசம் செய்த 3 பேருக்கு விளக்கமறியல்

Date:

திவுலபிட்டிய நகரில் பேருந்து ஓட்டுநர் மீது வாளால் தாக்குதல் நடத்த முயன்ற சம்பவம் தொடர்பாக, ஒரு பெண் உட்பட மூன்று பேரை ஓகஸ்ட் 18 வரை விளக்கமறியலில் வைக்குமாறு மினுவாங்கொட நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மோட்டார் வாகனத்தில் வந்த கணவன், மனைவி மற்றும் அவர்களது நண்பர் ஆகியோர், இலங்கை போக்குவரத்துசபை பேருந்து ஓட்டுநர் ஒருவரை வாளால் வெட்டுவதாக அச்சுறுத்திய சம்பவத்தை, பேருந்தில் பயணித்த ஒருவர் தனது கைப்பேசியில் பதிவுசெய்ததோடு, அந்தக் காணொளி சமூக ஊடகங்களிலும் பரப்பப்பட்டது.

காணொளிக் காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்திய திவுலபிட்டிய பொலிசார், சம்பந்தப்பட்ட சந்தேக நபர்களைக் கைது செய்து நேற்று (14) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

நீதிபதிகள் ஓய்வு வயது சர்ச்சை: ஜனாதிபதி- சட்டத்தரணிகள் சந்திப்பு சர்ச்சை!

உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை நீட்டிப்பது தொடர்பான முன்மொழியப்பட்ட...

இந்தியாவின் 80வது சுதந்திரதினம்

இந்தியாவின் 80வது சுதந்திர தினமான இன்றைய தினம் சனிக்கிழமை காலை யாழ்ப்பாணத்தில்...

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் உள்ளுணர்வு நிரலாக்கல் (Vibe Coding) பயிற்சிப் பட்டறை

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை மற்றும் கலாசார பீடத்தின் சமூக விஞ்ஞானங்கள்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்