மட்டக்களப்பில் முல்லைத்தீவு செஞ்சோலை சிறுவர் 61 பேர் படுகொலையின் 20 வருட நினைவேந்தல் தமிழ் தேசிய பேரவையால் இன்று வெள்ளிக்கிழமை (14) வை.எம்.சி.ஏ மண்டபத்தில் இரண்டு நிமிட மௌன அஞ்சலியுடன் சுடர் ஏற்றி உணர்வு பூர்வமாக இடம்பெற்றது.
தமிழ்த் தேசிய பேரவையின் ஏற்பாட்டில் தமிழ் தேசிய மக்கள்Add Post முன்னணி கட்சி தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தலைமையில் இடம்பெற்றது.
இந்த நினைவேந்தலில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் திருகோணமலை மட்டக்களப்பு மாவட்டங்களைச் சேர்ந்த கட்சியின் உறுப்பினர்கள் உட்பட பொதுமக்கள் கலந்து கொண்டு உயிரிழந்த சிறுவர்களின் திருவுருவபடங்களை கொண்ட காட்சிபடுத்தப்பட்ட பதாததைக்கு முன்னால் சுடர் ஏற்றி இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர்.




