இன்று சில பகுதிகளில் கடும் வெப்பம்

Date:

வவுனியா, முல்லைத்தீவு, திருகோணமலை, பொலன்னறுவை, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகலை மாவட்டங்களின் சில பகுதிகளில் இன்று (13) பகல் நேரத்தில் மனித உடலில் உணரப்படும் வெப்பநிலை கவனம் தேவைப்படும் அளவில் நீடிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேற்கு மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (13) அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என அத்துறை வெளியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பு தெரிவிக்கிறது. வடமேற்கு மாகாணத்தில் பல இடங்களில் மழை பெய்யக்கூடும். பிற்பகல் 2.00 மணிக்கு மேல் ஊவா மாகாணம் மற்றும் மட்டக்களப்பு, அம்பாறை, முல்லைத்தீவு மாவட்டங்களில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

நேற்று (12) காலை 8.30 மணி வரையிலான இருபத்தி நான்கு மணி நேரத்தில், மட்டக்களப்பு மாவட்டம் உன்னிச்சையில் 59 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

மாத்தறை முதல் பொத்துவில் வரை ஹம்பாந்தோட்டை வழியாகவும், சிலாபம் முதல் புத்தளம் மற்றும் மன்னார் வரை காங்கேசன்துறை வழியாகவும் உள்ள கடலோரப் பகுதிகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 50 கி.மீ. வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது. கொழும்பு முதல் பொத்துவில் வரை காலி மற்றும் ஹம்பாந்தோட்டை வழியாக உள்ள கடலோரப் பகுதிகளில் கடல் அலைகளின் உயரம் 2.5-3.0 மீட்டர் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்டுள்ள நிலவர அறிக்கையில், நேற்று (12) காலை நிலவரப்படி, 14 மாவட்டங்களில் நிலவும் பேரழிவு சூழ்நிலையால் 16,465 மக்களும், 4187 குடும்பங்களும் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 9 பேர் உயிரிழந்துள்ளனர். 7 பேர் காயமடைந்துள்ளனர். 2 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன. 691 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளன. மேலும், 120 குடும்பங்களைச் சேர்ந்த 468 பேர் 18 பாதுகாப்பான இடங்களில் உள்ளதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது. நீர்ப்பாசனத் திணைக்களத்திற்குச் சொந்தமான பொல்பிட்டிய, பொல்கொல்ல, லக்ஷபானா மற்றும் கேன்யன் நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

spot_imgspot_img

More like this
Related

நிதி நிறுவனத்தில் அதிர்ச்சிச்சம்பவம்: பெண்கள் கழிப்பறையில் இரகசிய கமரா!

ஒரு நிதி நிறுவனத்தில் பணிபுரியும் பெண்களின் நிர்வாணப் புகைப்படங்களை எடுத்த நபர்,...

லெபனானில் இஸ்ரேல் படைகள் தங்கியிருப்பதை ஏற்றுக்கொள்ளாத அமெரிக்கா!

லெபனானுக்குள் இஸ்ரேலிய இராணுவம் நிரந்தரமாகத் தங்கியிருப்பதை டிரம்ப் நிர்வாகம் ஆதரிக்கவில்லை என்று...

சுரேஷ் சாலேவை பரிசோதித்த சிறப்பு மருத்துவக்குழு

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் புலனாய்வுத்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்