துப்பாக்கி மீட்பு

Date:

பொலன்னருவை சோமவதி சரணாலயத்தில் புதரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரி-56 ரக துப்பாக்கி ஒன்றை, கொழும்பு மாவட்ட குற்றப்பிரிவினர் வெள்ளிக்கிழமை (24) அன்று மீட்டனர்.

கொழும்பு மாவட்ட குற்றப்பிரிவினருக்குக் கிடைத்த தகவலின்படி, சந்தேக நபர் எவரும் இன்றி ரி-56 ரக துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைக்காக அந்த ஆயுதம் வெலிகந்த பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ரி-56 ரக துப்பாக்கி ஒரு கருப்பு பொலித்தீன் பையில் புதைக்கப்பட்டிருந்ததாகவும், விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் வெலிகந்த பொலிஸ் கூறுகிறது.

விசாரணைகளை நடத்தி வரும் வெலிகந்த பொலிஸ், ரி-56 ரக துப்பாக்கியின் வரிசை எண் அழிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கிறது.

ஜனவரி 12 அன்று பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த ஒருவருக்கு இது சொந்தமானது என வெலிகந்த பொலிஸ் சந்தேகிக்கிறது.

spot_imgspot_img

More like this
Related

கிழட்டுச்சிங்கம் வருமாம்: ஊழல் வழக்கில் சிக்கியவர்கள் போடும் ‘சீன்’!

அனுராதபுரத்தில் நடைபெறவுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) பேரணியில் முன்னாள் ஜனாதிபதி...

இலங்கையில் இனி சிம் அட்டை பெறும் முறையில் பெரும் மாற்றம்

சட்டவிரோதச் செயல்களுக்கு அலைபேசி இணைப்புகள் பயன்படுத்தப்படுவதைக் கட்டுப்படுத்தும் நோக்கில், புதிய இணைப்புகளுக்கான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்