மட்டு வாவியில் கரையொதுங்கிய இரு சடலங்கள்

Date:

மட்டக்களப்பு வாவியில் உயிரிழந்த நிலையில் தெரியாத இரு ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கிய நிலையில் வியாழக்கிழமை (07) மாலை 5.00 மணிக்கு மீட்கப்பட்டுள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள சின்ன உப்போடை பகுதியில் உள்ள வாவியில் இரு சடலங்கள் மிதந்து கரை ஒதுங்கிய நிலையில் இருப்பதை கண்ட அப்பகுதியினர் பொலிசாருக்கு அறிவித்தனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் நீரில் மூழ்கி இருக்கும் இரு ஆண்களது சடலங்களை மீட்டனர்.

அதேவேளை நீதிமன்ற அனுமதியை பெற்று சடலத்தை பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கையை முன்னெடுத்து வருகின்றனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

-கனகராஜா சரவணன்-

Share post:

spot_imgspot_img

More like this
Related

விஜய் ஆட்சி அமைக்க இடதுசாரிகள் ஆதரவு: 118-க்கு இன்னும் 2 மட்டுமே தேவை!

தவெக ஆட்சியமைக்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவளித்த நிலையில், தற்போது மார்க்சிஸ்ட்...

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் முன்னாள் நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன தற்கொலை

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன தற்கொலை...

யாழில் இளைஞன் தாக்கப்பட்டதை வேடிக்கை பார்த்த பொதுமக்கள்: துணிந்து செயற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்!

யாழ்ப்பாணம், பண்டத்தரிப்பில் குழுவொன்றினால் தாக்கப்பட்ட இளைஞன் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இளைஞன் தாக்கப்பட்ட...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்