வவுனியா நகரில் முதியவரின் சடலம் மீட்பு

Date:

வவுனியா நகரில், கொறவப்பொத்தானை வீதியில், பெரிய பள்ளிவாசலுக்கு அருகாமையில் முதியவர் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது.
.
அந்தப் பகுதியில் நபர் ஒருவர் சடலமாக கிடப்பது தொடர்பாக இன்று மதியமே வவுனியா பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டிருந்தது. எனினும், தகவல் வழங்கி நீண்ட நேரமாகியும் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வரவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் அந்தப் பகுதியில் நீண்டகாலமாக யாசகம் பெற்று வந்த ஒரு முதியவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரது மரணத்திற்கான காரணம் இதுவரையில் உறுதிப்படுத்தப்படவில்லை.

சடலம் அங்கிருந்து அகற்றப்பட்டு, மேலதிக பரிசோதனைகளுக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டது.

spot_imgspot_img

More like this
Related

நாடாளுமன்ற குடியிருப்பை பெற்றவர்களின் விபரம்

கோட்டையில் உள்ள மாதிவெல நாடாளுமன்ற உறுப்பினர் குடியிருப்பு வளாகத்தில், தற்போதைய நாடாளுமன்றத்தைச்...

சிஐடியினர் அநுராதபுரம் சென்றால் முழு திருடர்களையும் ஒரே மேடையில் பிடித்திருக்கலாம்!

அனுராதபுரத்தில் நடைபெற்ற பொதுஜன பெரமுன தலைமையிலான பேரணியையும் ராஜபக்ச குடும்பத்தையும் விமர்சித்த...

வடக்கு, கிழக்கில் மழைக்கு வாய்ப்பு

எதிர்வரும் நாட்களில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மாலையில் இடியுடன் கூடிய...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்