மின்னல் தாக்கி யுவதி பலி

Date:

வெல்லவாய பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட ஹந்தபானாகல, கென் ஹத பகுதியில் மின்னல் தாக்கியதில் யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று முன்தினம் (7) மாலையில் இந்த சம்பவம் நடந்தது.

தொழில்நுட்ப கல்லூரியில் பயிலும் இந்த யுவதி, மாலையில் வீடு திரும்பிய போது, மழை பெய்ததால், வீட்டிற்கு அருகில் உள்ள தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்த தனது தாய் மற்றும் தந்தைக்கு, குடையை கொண்டு சென்றுள்ளார்.

அவர்களிடம் குழையை வழங்கி, பெற்றோருடன் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, யுவதி மின்னல் தாக்குதலுக்கு உள்ளானர்.

பெற்றோருக்கு மத்தியில் நடந்து வரும் போதே அவர் மின்னல் தாக்குதலுக்கு உள்ளானர். தாயாரும் சிறியளவில் பாதிக்கப்பட்டுள்ளார்.

மின்னல் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவத்தில் கென் ஹத பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய சமோதி மல்ஷானி என்ற யுவதியே உயிரிழந்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

தமிழ் தேசிய கட்சிகளின் சந்திப்பில் சூம் வழியாக கலந்து கொண்ட தமிழ் தேசிய பேரவைக்கு எதிர்ப்பு!

தமிழ் சட்டத்தரணிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் தமிழ் தேசிய கட்சிகளுக்கு இடையிலான கலந்துரையாடல்...

வழக்கு பொருட்களிலிருந்து ரூ.500 திருடிய பொலிஸ்காரர் கைது!

பொரல்ல பொலிஸ் நிலையத்தில் வழக்குப் பொருட்களிலிருந்து ரூ. 500 திருடப்பட்டது தொடர்பாக,...

‘நாட்டில் வேறு பிரச்சினையே இல்லையா?’ – திருப்பரங்குன்றம் குறித்த வழக்கு ஒன்று ரூ.50,000 அபராதத்துடன் தள்ளுபடி

திருப்பரங்குன்றம் மலைக்கு பக்தர்களை அனுமதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை ரூ.50...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்