பிரான்ஸில் சடலங்களாக மீட்கப்பட்ட தமிழ் தாயும், மகளும்!

Date:

பிரான்சின் சென்-சென்-டெனிஸ் (Seine-Saint-Denis) மாகாணத்திற்குட்பட்ட பான்டின் (Pantin) நகரில், ஈழத்தமிழ்த் தாயும் அவரது 20 வயது மகளும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

பான்டின் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்த இவர்கள், நீண்ட நாட்களாக வீட்டை விட்டு வெளியே வராததால் அக்கம் பக்கத்தினருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து, பொலிசார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். இதன்போதே இருவரும் உயிரிழந்த நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டனர்.

உயிரிழந்தவர்கள் இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட 50 வயது மதிக்கத்தக்க தாயும், அவரது 20 வயது மகளும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்களின் உயிரிழப்பிற்கான காரணம் குறித்து பிரான்ஸ் காவல்துறையினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். ஆரம்பகட்ட விசாரணைகளின் அடிப்படையில் இவர்கள் தற்கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்பட்ட போதிலும், உடற்கூறு ஆய்வு முடிவுகள் வெளிவந்த பின்னரே மரணத்திற்கான அதிகாரப்பூர்வமான காரணம் தெரியவரும்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

காதலியுடன் ஆந்திராவில் பதுங்கியிருந்த சவுக்கு சங்கர் கைது!

நிபந்​தனை ஜாமீனை மீறி, நீதி​மன்​றத்​தில் சரணடை​யாமல் ஆந்​தி​ரா​வில் தலைமறை​வாக இருந்த சவுக்கு...

அமெரிக்க, ஈரான் பேச்சுவார்த்தைக்காக பாக். தலைநகரில் 2 நாட்கள் விடுமுறை!

இஸ்லாமாபாத்தில் நடைபெறவுள்ள அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான பேச்சுவார்த்தைகளை முன்னிட்டு, பாகிஸ்தான்...

பொலிசார் புத்தாண்டு அன்பளிப்புக்களை பெற தடை!

அன்பளிப்புகளைப் பெற்றுக்கொள்ளாதிருத்தல் மற்றும் புத்தாண்டு உபசரிப்பு நடவடிக்கைகளுக்காக நிதி ஒதுக்கீடு செய்வது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்