கெசல்கமுவ ஓயாவில் ஒரு பெண்ணின் சடலம் மிதந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது.
நோர்வுட்-பொகவந்தலாவ-மஸ்கெலிய பிரதான சாலையில் உள்ள நோர்வுட் பாலத்திற்குக் கீழே ஒரு பெண்ணின் சடலம் மிதப்பதாக அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் அடிப்படையில் இந்த சடலம் கண்டெடுக்கப்பட்டது.
சடலத்தின் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்றும், மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என்றும் பொலிசார் தெரிவித்தனர்.



