சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கயல் சீரியலில் நடித்த நடிகை சுபாஷினி தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார்.
இலங்கையை சேர்ந்த நடிகை சுபாஷினி பாலசுப்ரமணியம் (36), திரைத்துறை மீதான காதலால் இந்தியாவில் தஞ்சமடைந்தார்.
திரைப்படங்களில் சிறு வேடங்கள், சில சீரியல்களில் நடித்து வந்தார். இந்த நிலையில், கர்நாடகாவை சேர்ந்த பிபின் சந்ரா என்பவரை காதலித்து திருமணம் செய்தார். மிக அண்மையில்தான் இவர்கள் திருமணம் செய்து கொண்டனர்.
திருமணத்தின் பின் கணவருடன் பெங்களூரில் வசித்து வந்தார். கயல் சீரியல் படப்பிடிப்புக்காக சென்னை ஐயப்பன்தாங்கலில் உள்ள வாடகை வீட்டில் தங்கியிருந்தார்.
சன் டிவியில் ஒளிபரப்பாகும் கயல் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருந்த இவர், சம்பவம் நடந்த நாளுக்கு முன்புவரை சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்தார்.
இந்த நிலையில் அவருக்கும் அவரின் கணவருக்கும் இடையே வீடியோ அழைப்பில் நடந்த தகராறையடுத்து, உயிரை மாய்த்துள்ளார்.



