காலியில் இருவர் வெட்டிக்கொலை

Date:

காலி, தெலிகட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடவில, 13 ஏக்கர் பகுதியில் இன்று (03) காலை ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் மீது நபர் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்குதல் நடத்தியுள்ளார்.

இன்று காலை 6.00 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவித்த பொலிஸார், தாக்குதலில் காயமடைந்தவர்களை வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்த போதிலும், அவர்களில் இருவர் உயிரிழந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

இந்தத் தாக்குதலில் உயிரிழந்தவர்கள் குறித்த குடும்பத்தின் பாட்டி மற்றும் அவரது பேத்தியின் கணவர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தாக்குதலில் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருபவர் உயிரிழந்த பாட்டியின் பேத்தியாவார்.

தாக்குதலினால் அவரது ஒரு கை உடலில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் தற்போது கராபிட்டிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபர் தெலிகட பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் உயிரிழந்த பெண்ணின் மற்றொரு மகளின் கணவர் எனவும், அந்த மகள் தற்போது இத்தாலியில் பணியாற்றி வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர் உனவடுன, தலவெல்ல பகுதியைச் சேர்ந்த 35 வயதுடையவர் எனவும், அவர் ஒரு முன்னாள் இராணுவ வீரர் எனவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

குடும்பத் தகராறு காரணமாகவே சந்தேகநபர் இந்தத் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் எல்பிட்டிய குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வுகளை முன்னெடுத்தனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

சட்டவிரோதமாக மணல் ஏற்றிய டிப்பர்கள் சிக்கின!

கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லாறு பகுதியில் அனுமதி பத்திரத்திற்கு முரணான...

“இது மக்களுக்கான அரசியல் இல்லை” – விஜய்யை கடுமையாக சாடிய சேரன்

“உங்கள் கவர்ச்சி மட்டும் மக்களுக்கான அரசியல் இல்லை” என்று தவெக தலைவர்...

கிரிக்கெட் போட்டிக்கு சென்ற மாணவர்கள் பேருந்து விபத்தில் பலி

கண்டி, புனித சில்வெஸ்டர் கல்லூரிக்கும் வித்யார்த்தா கல்லூரிக்கும் இடையே நடைபெறும் வருடாந்திர...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்