ஏப்ரல் 1 இரட்டை இலக்க வாகனங்களும் எரிபொருள் நிரப்பலாம்!

Date:

நாளை (ஏப்ரல் 1) ஒற்றை மற்றும் இரட்டை பதிவு எண்கள் கொண்ட வாகனங்கள் QR ஒதுக்கீட்டின் கீழ் எரிபொருள் நிலையங்களில் எரிபொருள் பெறலாம் என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

மார்ச் 31 மற்றும் ஏப்ரல் 1 ஆகிய திகதிகள் அடுத்தடுத்த ஒற்றை எண்களில் வருவதால், இரட்டை பதிவு எண்கள் கொண்ட வாகனங்களுக்கு எரிபொருள் கிடைப்பதில் தடை ஏற்படும் என்றும், எனவே இந்த சிறப்பு ஏற்பாடு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

அதன்படி, ஒற்றை மற்றும் இரட்டை பதிவு எண்கள் கொண்ட வாகனங்கள் நாளை தத்தமது QR ஒதுக்கீட்டின் கீழ் எரிபொருள் பெற அனுமதிக்கப்படும்.

இந்த ஏற்பாடு ஏப்ரல் 1 ஆம் திகதிக்கு மட்டுமே பொருந்தும் என்றும், அதன் பிறகு வழக்கமான ஒற்றை-இரட்டை முறை மீண்டும் தொடங்கும் என்றும் பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெளிவுபடுத்தியுள்ளது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

மண்டைதீவு படுகொலை வழக்கு ஜூலை வரை ஒத்திவைப்பு

மண்டைதீவு படுகொலையின் வழக்கு இன்றையதினம் (31) ஊர்காவற்றுறை நீதிமன்றில் நீதிவான் அனீபா...

நாதக சட்டப்பேரவை செல்ல வேண்டும்.. ஏனெனில்? – ஆதரவுடன் விவரிக்கும் சேரன்

நாம் தமிழர் கட்சியினர் சட்டப்பேரவை செல்ல வேண்டும் என்று நீண்ட விளக்கத்துடன்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்