சட்டவிரோதமான முறையில் டீசல் எரிபொருளை வைத்திருந்தமை, விற்பனை செய்தமை தொடர்பில் நேற்று (23) திங்கட்கிழமை கொம்மாதுறை பகுதியை சேர்ந்த ஒருவரை கைது செய்ததாக ஏறாவூர் போலீசார் தெரிவித்தனர்.
பொலிசருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் பிரகாரம் கொம்மாதுறை பகுதியில் வீட்டில் அனுமதிப்பத்திரமின்றி 230 லீற்றர் பீப்பாய்யில் டீசலை பதிக்கி வைத்திருந்த சந்தேகநபரை கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவங்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் இதில் கைத்தனவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துவருவதாக பொலிசார் தெரிவித்தனர்.
-கனகராசா சரவணன்-



