யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியின் இல்ல மெய்வல்லுனர் போட்டியில் தீக்காயமடைந்த 4 மாணவர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதி்க்கப்பட்டுள்ளனர்.
நேற்று முன்தினம் நடந்த பாடசாலை இல்ல மெய்வல்லுனர் போட்டியில் இந்த மாணவர்கள் தீக்காயமடைந்தனர்.
மெய்வல்லுனர் போட்டியின் இடைவேளை நிகழ்வின் போது, ஓடு உடைக்கும் நிகழ்வு நடந்துள்ளது. இதன்போது ஓட்டின் மீது எரிபொருள் நனைக்கப்பட்ட துணி வைக்கப்பட்டு, தீ மூட்டப்பட்டு, ஓடு உடைக்கப்பட்டது.
உடலில் ஒட்டாத பருத்தித்துணிகளை ஒத்த துணிகளை பாவித்தே இந்த வகை நிகழ்வுகளில் தீ மூட்டப்படுவது வழக்கம். எனினும், இந்த சம்பவத்தில் உடலில் ஒட்டக்கூடிய பொலியெஸ்ரர் வகை துணிகள் பாவிக்கப்பட்டிருக்கலாமென கருதப்படுகிறது.



