நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனுக்கு எதிர்ப்பு தெரிவித்து கிளிநொச்சியில் போராட்டம் நடந்தது.
இரணைமடு கமக்காரர் அமைப்பினர் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அர்ச்சுனா இராமநாதன் அண்மையில் கிளிநொச்சி அபிவிருத்திக்குழு கூட்டத்தில், இரணைமடு கமக்காரர் அமைப்பு பற்றி தவறான கருத்துக்களை தெரிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த போராட்டம் நடந்தது.



