வசந்த முதலிகேவின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டதாக அறிவிப்பு

Date:

2022ஆம் ஆண்டு ‘அரகலய’ போராட்டக் காலத்தில், அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அப்போதைய ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகேயை பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்து தடுத்து வைத்ததன் மூலம், பொலிஸார் அவரின் அடிப்படை மனித உரிமைகளை மீறியுள்ளதாக உயர்நீதிமன்றம் இன்று (19) தீர்ப்பளித்துள்ளது.

தடுப்புக்காவலில் இருந்த வசந்த முதலிகே சார்பில் சட்டத்தரணி மஞ்சுள பாலசூரியவினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணை செய்த பின்னர், நீதியரசர்களான அர்ஜுன ஒபேசேகர மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோரின் உடன்பாட்டுடன், உயர்நீதிமன்ற நீதியரசர் சோபித ராஜகருணா இந்தத் தீர்ப்பை வழங்கினார்.

2022ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் 18ஆம் திகதி அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் நடத்தப்பட்ட போராட்டத்தைத் தொடர்ந்து, அதன் ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகே கைது செய்யப்பட்டு பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டமையை சவாலுக்கு உட்படுத்தி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

நீண்ட விசாரணைக்குப் பின்னர் தீர்ப்பை அறிவித்த நீதியரசர்கள் குழாம், போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட வசந்த முதலிகேயை பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைப்பதற்குத் தேவையான நியாயமான சந்தேகத்தை உறுதிப்படுத்தும் விடயங்களை பிரதிவாதிகள் சமர்ப்பிக்கவில்லை என சுட்டிக்காட்டியது.

அத்துடன், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் வசந்த முதலிகே மீதான குற்றச்சாட்டுகளை நீதிமன்றத்தில் நிரூபிக்க பிரதிவாதிகள் தவறிவிட்டதாகவும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, வசந்த முதலிகேயை பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்து தடுத்து வைப்பதற்கான தீர்மானத்தை நியாயப்படுத்த பிரதிவாதிகள் தவறியுள்ளனர் என்றும், இதன் மூலம் அரசியலமைப்பின் 12(1) மற்றும் 13(1) ஆகிய உறுப்புரைகளால் உறுதிப்படுத்தப்பட்டுள்ள அடிப்படை மனித உரிமைகளை, பேலியகொடை விசேட விசாரணைப் பிரிவின் பிரதான பொலிஸ் பரிசோதகர் டபிள்யூ.ஜி.ஏ.கே. கமகே மீறியுள்ளார் என்றும் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்த மனுவின் பிரதிவாதிகளாக முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன, மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னக்கோன், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் காவிந்த பியசேகர உள்ளிட்டோர் பெயரிடப்பட்டிருந்தனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

பயணிகளை இடைநடுவில் இறக்கிவிட்ட தனியார் பேருந்து 3 நாட்கள் சேவையில் ஈடுபட தடை!

பயணிகளை இடைநடுவில் இறக்கிவிட்டு, தனியார் நிறுவனப் பணியாளர்களை ஏற்றிச்சென்ற தனியார் பேருந்துக்கு...

கோட்டாபய தப்பியோட கடற்படைக்கு செலுத்திய பண விபரத்தை வெளியிடும் உத்தரவு: கடற்படையின் மனு நிராகரிப்பு!

2022 பொதுமக்கள் எழுச்சியின் போது, உயிரைப்பாதுகாத்துக் கொள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய...

உலக முடிவிடத்தில் செல்பி எடுத்தபோது தவறி விழுந்த கொழும்பு பல்கலைக்கழக மாணவி மீட்பு!

நுவரெலியாவில் உள்ள ஹோட்டன் சமவெளி 'உலக முடிவு' (World's End) சுற்றுலாத்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்