இலங்கைக்கு அருகில் அமெரிக்க நீர்மூழ்கி கப்பலின் தாக்குதலில் மூழ்கிய ஈரானிய போர்க் கப்பலில் இருந்த 87 கடற்படையினரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
இந்தியாவின் விசாகப்பட்டினத்திலிருந்து மீண்டும் ஈரான் நோக்கிப் புறப்பட்ட ‘ஐரிஸ் டேனா’ கப்பலில் 180 பேர் கொண்ட பணியாளர்கள் குழுவொன்று இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்க தாக்குதலின் பின்னர் அக்கப்பலில் இருந்த சுமார் 100 பேர் காணாமல் போயுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சின் வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.
இந்த நிலையில், காணாமல் போனவர்களில் 87 பேரின் சடலங்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன.



