இனி யாழ் மாநகரசபை கூட்டங்களில் ஆணையாளர் பங்குபற்றார்!

Date:

எதிர்வரும் காலங்களில் யாழ் மாநகர சபை ஆணையாளர் மாநகர சபை அமர்வுகளில் பங்கேற்கமாட்டார் என மாநகர முதல்வருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழ் மாநகர சபையின் மாதாந்த அமர்வு நேற்றையதினம் மாநகர சபை முதல்வர் மதிவதனி விவேகானந்தராஜா தலைமையில் நடைபெற்ற போது குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டது.

இதன்போது மாநகர சபை ஆணையாளர் பங்கேற்கவில்லை. தான் பங்கேற்காதமை தொடர்பில் மாநகர சபை முதல்வருக்கு கடிதம் மூலம் தெளிவுபடுத்தியுள்ளார்.

குறித்த கடிதத்தில், மாநகர சபை ஆணையாளர் மாநகர சபை கூட்டத்தில் பங்கேற்பது தொடர்பாக மாநகர சபை கட்டளைச் சட்டங்களிலோ மாநகர சபை நியம துணை விதிகளிலோ குறிப்பிடப்படாததால் எதிர்வரும் காலங்களில் பங்கேற்க முடியாது என தெரிவித்துள்ளார்.

சபை அமர்வு குழு நிலை கூட்டங்களாக மாற்றப்படும் சந்தர்ப்பங்களில் மாநகர சபை ஆணையாளரின் ஆலோசனை தேவை என கருதும் பட்சத்தில் அழைக்கப்பட்டால் பங்கேற்பேன் எனவும் தெரிவித்துள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் மாநாடு அறிவார்ந்த போராட்ட வடிவமாகும்.

வலிந்து காணாமலாக்கப்பட்ட தாய்மார்களின் நீதிகோரிய போராட்டங்களுக்கு ஒத்துழைப்பது நியாயம் விரும்பும் சகலரினது...

சமிந்த விஜேசிறி எம்.பிக்கு ஒன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை

பதுளை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயராம் திரொட்ஸ்கி, சட்டவிரோதமாக இடையூறு செய்தல்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்