வடமராட்சி கிழக்கில் பருத்தித்துறை பிரதேச சபையின் உறுப்பினரின் கணவர் குத்திக் கொலைசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று (2026.01.01) பிற்பகல் 5 மணியளவில் மருதங்கேணி விறுமர் கோவிலை அண்மித்த பகுதியில் இடம்பெற்றுள்ளது. கத்திக் குத்துக்கு இலக்கானவர் பருத்தித்துறை பிரதேசசபையின் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் உறுப்பினர் ஜெனிற்றா என்பவரின் கணவரான தவநேசன் (40) என்பராவார்.
சந்தேகநபரை பொலிசார் கைது செய்துள்ளனர். கொல்லப்பட்டவரின் குடும்பத்துடன் நெருக்கமான இளைஞனே கைது செய்யபபட்டுள்ளார். தனிப்பட்ட காரணங்களால் இந்த கொலை நடந்ததா என்ற கோணத்திலும் மருதங்கேணி பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.



