கிண்ணியா கண்டல் காடு பகுதியில் வெள்ளத்தின் பின்னர் வெளிவந்திருந்த 36 கைக்குண்டுகள் மீட்பு

Date:

திருகோணமலை கிண்ணியா பொலிஸ் பிரிவிலுள்ள கண்டல் காடு பகுதியில் வெள்ளத்தின் பின்னர் வெளிவந்த 36 கை குண்டுகளை வியாழக்கிழமை (04) விசேட அதிரடிப்படையினர் உதவியுடன் மீட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

மாவிலாறு குளம் உடைப்பையடுத்து கிண்ணியா பிரதேசம் வெள்ளத்தில் மூழ்கியுள்ள நிலையில் தற்போது வெள்ள நீர் வழிந்தோடியது அடுத்து அந்த பகுதியை சுத்தம் செய்யும் போது வெள்ளத்தில் இருந்து வெளிவந்த குண்டுகளை கண்டு பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டது

இதையடுத்து விசேட அதிரடிப்படையின் குண்டு செயலிழக்கும் பிரிவு வரவழைக்கப்பட்டு அங்கு கைவிடப்பட்டிருந்த 36 கை குண்டுகளை மீட்டதுடன் நீதிமன்ற உத்தரவை பெற்று இதனை செயலிழக்க வைப்பதற்காக நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக பொலிசர் தெரிவித்தனர்.
-கனகராசா சரவணன்-

Share post:

spot_imgspot_img

More like this
Related

விமானம் ரத்தானதால் ஆன்லைன் மூலம் ‘ரிசப்ஷனில்’ பங்கேற்ற புதுமண ஜோடி

இண்​டிகோ விமானம் திடீரென ரத்து செய்​யப்​பட்​ட​தால் புதுமண ஜோடி திருமண வரவேற்​பில்...

2026 வரவு செலவு திட்டம் நிறைவேற்றம்!

2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு, திருத்தங்களுடன்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்