இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுங்கள்: தமிழ் கட்சிகள் கூட்டாக இந்தியாவிடம் கோர முடிவு!

Date:

டித்வா புயலை தொடர்ந்து முழு இலங்கையிலும் ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் இயல்பு வாழ்க்கையை மீட்டெடுக்க, இந்தியா முழுமையான உதவியை வழங்க வேண்டுமென கோரி, தமிழ் கட்சிகள் கூட்டாக கோரிக்கை முன்வைக்க திட்டமிட்டுள்ளன.

இதற்கான கலந்துரையாடல் இன்று (டிச.3) யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது.

தமிழ் கட்சிகள் கூட்டாக இந்திய அரசிடம் கோரிக்கை விடுவதென கொள்கையளவில் இணக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து, இது பற்றி கலந்துரையாடல் நடத்தி, கடிதத்தை இறுதி செய்ய இன்று காலையில் யாழ்ப்பாணத்தில் கூடுகிறார்கள்.

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்வைத்த யோசனையை தொடர்ந்து இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாழ், முத்திரைச்சந்தியிலுள்ள இலங்கை தமிழ் அரசு கட்சியின் பதில் தலைவர் சீ.வீ.கே.சிவஞானத்தின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடக்கவுள்ளது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

உலக முடிவிடத்தில் செல்பி எடுத்தபோது தவறி விழுந்த பல்கலை மாணவியை மீட்டது எப்படி?: பள்ளத்தாக்கில் இறங்கியவரின் அனுபவம்!

உலகின் இறுதி முனையான ஹோர்டன் சமவெளிக்கு களப்பயணம் சென்றிருந்த மருத்துவ மாணவி...

சுறாவின் இரத்தத்தில் கோகோயின் போதை!

பஹாமாஸ் கடற்கரைக்கு அருகில் நீந்தும் சுறாக்களின் இரத்தத்தில், காஃபின், கோகோயின், வலி...

வட்ஸ் அப் மூலம் அவதூறு: யாழில் 17 வயது சிறுமி எடுத்த விபரீத முடிவு!

யாழ்ப்பாணம், மாதகல் பகுதியில் 17 வயதான சிறுமியொருவர் தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளார். நேற்று...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்