வெலிமடை, போரலந்த, கந்தேபுஹுல்ப்பொல பிரதேசத்தில் வௌ்ளத்தில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயிருந்த தம்பதியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் (17) மாலை வெலிமடைப் பிரதேச செயலாளர் பிரிவில் பெய்த அதிக மழை காரணமாக ஏற்பட்ட வௌ்ளப்பெருக்கில் சிக்கி தம்பதியினர் காணாமல் போயிருந்தனர்.
நேற்று இரவு முழுவதும் பிரதேசவாசிகளால் இந்தத் தம்பதியினரைத் தேடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டபோது, மனைவியின் சடலம் முதலில் மீட்கப்பட்டது. பின்னர் கணவரின் சடலமும் மீட்கப்பட்டுள்ளது.
கோனஹேன முகாமில் கடமையாற்றிய கந்தேபுஹுல்பொல, வாங்கியாகும்புர, திக்வத்தையில் வசித்து வந்த பொலிஸ் சார்ஜன்ட் (75907) டி.எம்.அச்சிந்த, லக்மாலி மதுஷங்க (37) மற்றும் எச்.எம்.நளினி தனஞ்சனி (33) ஆகிய இருவருமே உயிரிழந்துள்ளனர். இவர்களுக்கு 8 வயதில் ஒரு மகனும் உள்ளார்.
இவர்கள் மலைப்பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் காய்கறிகளை பயிரிட்டு வருகின்றனர். 17 ஆம் திகதி, அவர்கள் தோட்டத்தில் இருந்தபோது, பலத்த மழை பெய்யத் தொடங்கியது. இதன் காரணமாக, இருவரும் தங்கள் வீட்டிற்குத் திரும்பினர். அங்கு, ஓடையைக் கடக்க முயன்றபோது இருவரும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். பின்னர், 17 ஆம் திகதி இரவு, கிராமவாசிகள், காவல்துறை மற்றும் பாதுகாப்புப் படையினர் இணைந்து இருவரையும் தேடினர்.
தேடும் போது, அன்று இரவு மனைவியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. பின்னர், நேற்று கணவனின் உடல் மீட்கப்பட்டது.



