கிளிநொச்சி, அக்கராயன் பகுதியில் இளைஞர் ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார்.
இன்று (20) அதிகாலை 1.30 மணியளவில் அக்கராயன், ஈச்சங்குளம் பகுதியில் இளைஞர் வெட்டிக்கொல்லப்பட்டுள்ளார்.
24 வயதான கஜன் என்பவரே வெட்டிக்கொல்லப்பட்டார்.
கசிப்பு வியாபாரம் தொடர்பான தகராற்றினால் இந்த கொலை நடந்ததாக சந்தேகிக்கப்படுகிறது. கொலையை செய்ததாக சந்தேகிக்கப்படும் நபர் தலைமறைவாகியுள்ளார்.
கொல்லப்பட்டவரும், சந்தேகநபரும் குற்றபபின்னணியுடையவர்கள்.
அக்கராயன் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.




