நடிகை ஹன்சிகாவின் மனுவை தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம்

Date:

தனக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட குடும்ப வன்முறை வழக்கை ரத்து செய்யக்கோரி நடிகை ஹன்சிகா தாக்கல் செய்த மனுவை, மும்பை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

நடிகை ஹன்சிகா, தொழிலதிபர் சோஹைல் கத்தூரியா என்பவரைக் காதலித்து, கடந்த 2022-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். ஹன்சிகாவின் திருமணம் முடிந்து சில நாட்களுக்குள், அவருடைய சகோதரர் பிரசாந்த் மோத்வானிக்கும் அவர் மனைவி முஸ்கான் நான்சி ஜேம்ஸுக்கும் பிரச்சினை ஏற்பட்டது. இதன் காரணமாக விவாகரத்துக் கோரி பிரசாந்த், மனு தாக்கல் செய்தார்.

இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், கடந்த 2024-ம் ஆண்டு தனது கணவர் பிரசாந்த், ஹன்சிகா, அவர் தாயார் மோனா ஆகியோர் மீது, தன்னை சித்தரவதை செய்ததாக மும்பை அம்பாலி போலீஸில் குடும்ப வன்முறை புகார் கொடுத்தார், முஸ்கான். மூவரும் தன்னிடமிருந்து பணம் மற்றும் விலை உயர்ந்த பரிசுப் பொருட்களைக் கேட்பதாகவும் கணவருடன் வாழ விருப்பம் தெரிவித்தும்கூட, அதற்கு ஹன்சிகாவும் அவர் தாயாரும் தடையாக இருப்பதாகவும் கூறியிருந்தார். இதையடுத்து ஹன்சிகா உள்ளிட்டோர் மீது போலீஸார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் இருந்து ஹன்சிகா உள்ளிட்டோர் ஜாமீன் பெற்றனர்.

இதையடுத்து, தங்களுக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட குடும்ப வன்முறை வழக்கை ரத்து செய்யக்கோரி ஹன்சிகா, மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இம்மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. விசாரணையை தொடரவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் இந்த வழக்கில் அவரிடம் போலீஸார் விசாரணை மேற்கொள்ள இருக்கின்றனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரி இவர்தான்: தனி விசாரணை நடத்தி கண்டுபிடித்த கோட்டாவின் கூட்டாளி!

ஈஸ்டர் தாக்குதல்களின் சூத்திரதாரி சஹாரன் ஹாஷிம் தான் என்று சட்டத்தரணி உதய...

‘என் குழந்தைக்கு தந்தை இவர்தான்’: இலங்கை கிரிக்கெட் வீரர் சம்மிக கருணாரத்ன மீது விமானப்பணிப்பெண் தொடர்ந்த வழக்கு!

கிரிக்கெட் வீரர் சம்மிக கருணாரத்னவை டி.என்.ஏ பரிசோதனைக்கு உட்படுத்துவதா இல்லையா என்பதைத்...

க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின!

2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் நேற்று (31) நள்ளிரவு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்