யாழில் வீட்டுவாசலில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞன்

Date:

இரவு நேரம் இசை நிகழ்ச்சிக்கு சென்று, நண்பர்களுடன் மகிழ்ச்சியாக இருந்து விட்டு திரும்பிய இளைஞன் ஒருவர் பாம்பு தீண்டி உயிரிழந்த நிலையில் வீட்டு வாசலில் சடலமாக மீட்கப்பட்டதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.

அருகில் உள்ள ஆலயத்தில் இடம்பெற்ற இசைநிகழ்ச்சியில் கலந்து விட்டு, நண்பர்களுடன் மகிழ்ச்சியாக இருந்துவிட்டு வீடு திரும்பும் பொழுது இளைஞன் வீட்டுக்கு முன்னால் இறந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.

புத்தூர் கிழக்கை சேர்ந்த செல்வச்சந்திரன் மிமோஜன் (வயது 27) என்பவரே சடலமாக மீட்கப்பட்டார்.

வீட்டு வாசலில் இளைஞன் வீழ்ந்து கிடப்பதை கண்ட உறவினர்கள் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலைக்கு எடுத்து சென்று அனுமதித்த பொழுதும் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சடலம் மீதான உடல் கூற்று பரிசோதனையில் அவர் பாம்பு தீண்டி உயிரிழந்தது தெரிய வந்தது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

மே 1 முதல் அறிமுகமாகிறது டிஜிட்டல் மோட்டார் காப்பீட்டு அட்டை

இலங்கையின் முதல் டிஜிட்டல் மோட்டார் காப்பீட்டு அட்டை மே 1 முதல்...

நயன்தாராவின் இந்திப் பட ரிலீஸ் அறிவிப்பு

கார்த்தி, நாகார்ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்களை இயக்கியவர்...

பிரதமர் மோடி கொடுத்த 10 ரூபாயை ரூ.1.11 லட்சத்துக்கு வாங்க பலர் ஆர்வம்

மேற்கு வங்க தேர்தல் பிரச்சாரத்துக்காக பிரதமர் மோடி கடந்த வாரம் ஜார்கிராமுக்கு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்