யாழில் வீட்டுவாசலில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞன்

Date:

இரவு நேரம் இசை நிகழ்ச்சிக்கு சென்று, நண்பர்களுடன் மகிழ்ச்சியாக இருந்து விட்டு திரும்பிய இளைஞன் ஒருவர் பாம்பு தீண்டி உயிரிழந்த நிலையில் வீட்டு வாசலில் சடலமாக மீட்கப்பட்டதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.

அருகில் உள்ள ஆலயத்தில் இடம்பெற்ற இசைநிகழ்ச்சியில் கலந்து விட்டு, நண்பர்களுடன் மகிழ்ச்சியாக இருந்துவிட்டு வீடு திரும்பும் பொழுது இளைஞன் வீட்டுக்கு முன்னால் இறந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.

புத்தூர் கிழக்கை சேர்ந்த செல்வச்சந்திரன் மிமோஜன் (வயது 27) என்பவரே சடலமாக மீட்கப்பட்டார்.

வீட்டு வாசலில் இளைஞன் வீழ்ந்து கிடப்பதை கண்ட உறவினர்கள் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலைக்கு எடுத்து சென்று அனுமதித்த பொழுதும் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சடலம் மீதான உடல் கூற்று பரிசோதனையில் அவர் பாம்பு தீண்டி உயிரிழந்தது தெரிய வந்தது.

spot_imgspot_img

More like this
Related

மாகாண மட்டத்தில் முதலிடம்: தேசிய போட்டிக்குத் தெரிவான சாய்ந்தமருது அல்-ஹிலால் மாணவன்

சாய்ந்தமருது கமு/கமு/அல்-ஹிலால் வித்தியாலயத்தில் தரம் 11 இல் கல்வி பயிலும் எம்.என்.எம்....

தண்ணீர் என நினைத்து இரசாயனத்தை அருந்திய சிறுமி பலி

கம்பளை, புப்புரேசா, டெல்டாவத்தை பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்குச் சென்றிருந்த மூன்று...

சிறையில் இறந்ததாக கூறப்பட்டவர் இறுதிச்சடங்கின் போது திடீரென வந்ததால் பரபரப்பு!

சிறையிலிருந்த ஒருவர் இறந்துவிட்டதாகப் பொலிஸாரால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டு, அவரது இறுதிச்சடங்குகளுக்காக அனைத்து...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்