யாழ்ப்பாணம், ஊரெழு பகுதியில் வாள்வெட்டுத் தாக்குதலில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஊரெழு, பேபிபுரம் பகுதியில் இன்று (23) இந்த சம்பவம் நடந்தது.
அரியாலையை சேர்ந்த 40 வயதான ஒருவர், வீதியோரமாக தொலைபேசி பேசிக்கொண்டிருந்த போது, மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அவரை வாளால் வெட்டி படுகாயப்படுத்தினர்.
கை, கால், முதுகில் படுகாயமடைந்த அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.



