திங்களன்று வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், 13 வயதுக்கு முன் ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்துவது குழந்தைகளின் மன ஆரோக்கியத்தை சேதப்படுத்தும் என்று கண்டறியப்பட்டுள்ளது. புதிய ஆராய்ச்சியின் படி, டீன் ஏஜ் குழந்தைகள் ஸ்மார்ட்போன்கள் மற்றும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதை பெற்றோர்கள் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
13 வயதுக்குட்பட்ட குழந்தைகள் ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்துவது தற்கொலை எண்ணங்கள், மோசமான உணர்ச்சி கட்டுப்பாடு, குறைந்த சுய மதிப்பு மற்றும் யதார்த்தத்திலிருந்து விலகல் ஆகியவற்றுடன் தொடர்புடையது. குறிப்பாக பெண்களிடையே இதன் பாதிப்பு அதிகமாக வெளிப்படும். மனித மேம்பாடு மற்றும் திறன்கள் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வின்படி இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
13 வயதிற்கு முன் ஒருவர் ஸ்மார்ட்போன் வாங்கும் ஒவ்வொரு வருடத்திற்கும், அவர்களின் மன ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு குறைவாக இருக்கும் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
13 வயதிற்கு முன் ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்திய குழந்தைகள் சமூக ஊடகங்களை அதிகமாக அணுகியதாலும், தூக்கக் கோளாறுகள், சைபர்புல்லிங் மற்றும் எதிர்மறை குடும்ப உறவுகளை அனுபவித்ததாலும் இது நிகழ வாய்ப்புள்ளது என்று ஆய்வின்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. 163 நாடுகளில் கிட்டத்தட்ட 2 மில்லியன் மக்களிடம் நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பில் சுய அறிக்கைகளின் அடிப்படையில் இந்தத் தரவு அமைந்துள்ளது.



