இலங்கையின் குற்றப் புலனாய்வுத் துறையின் (CID) இயக்குநராக மூத்த காவல் கண்காணிப்பாளர் ஷானி அபேசேகர நியமிக்கப்பட்டுள்ளார்.
பதில் காவல் துறைத் தலைவர் பிரியந்த வீரசூரியவின் பரிந்துரையை, தேசிய பொலிஸ் ஆணைக்குழு ஏற்றுக்கொண்டதை தொடர்ந்து, இந்த நியமனம் வழங்கப்பட்டது.
2017 முதல் 2019 வரை முன்னாள் CID இயக்குநராக இருந்த அபேசேகர, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கத்தின் கீழ், அக்டோபர் 2024 இல் மீண்டும் காவல் சேவையில் சேர்க்கப்பட்டார். அவர் தனது சமீபத்திய நியமனத்திற்கு முன்பு குற்றப் புலனாய்வு பகுப்பாய்வு மற்றும் தடுப்புப் பிரிவின் இயக்குநராக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்தார்.




