யாழில் நிலத்தடி நீர் வளத்தை மேம்படுத்தும் கலந்துரையாடல்

Date:

யாழ் மாவட்டத்தின் நிலத்தடி நீரை மேம்படுத்தும் முகமாக விசேட விழிப்புணர்வு கருத்தமர்வு இன்று காலை யாழ் திருநெல்வேலியில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் முன்னெடுக்கப்பட்டது.

பிரித்தானிய அரசாங்கத்தின் சர்வதேச அபிவிருத்தி திட்டத்தின் கீழ் சர்வதேச நீர் முகாமைத்துவ நிறுவனத்தின் ஒழுங்குபடுத்தலில் யாழ்ப்பாணம் மாவட்டத்தின் நீர் மேலாண்மை தொடர்பாக பல்வேறு செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது .

இந்நிலையில் குறித்த நிகழ்ச்சி திட்டத்தின் பங்குதாரர்களான சர்வதேச நீர் முகாமைத்துவ நிறுவனம்,யாழ் பல்கலைக்கழக அதிகாரிகள் மற்றும் பேராசிரியர்கள் , துறைசார் திணைக்கள அதிகாரிகள் மாணவர்கள் மற்றும் திட்டத்தின் பங்குதாரர்களுக்கான விசேட கருத்தமர்வு முன்னெடுக்கப்பட்டது.

இதன் பொழுது பிரித்தானிய உயர்ஸ்தானிகராலய உயர்ஸ்தானிகர் அன்று பட்றிக் விசேட அதிதியாக கலந்து விசேட உரை ஆற்றினார் .

நிகழ்வில் மாணவர்களிடையே நன்னீர் விழிப்புணர்வை மேம்படுத்துவது தொடர்பில் நடாத்தப்பட்ட ஓவிய போட்டி மற்றும் வினா விடை போட்டிகளுக்கான பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.

spot_imgspot_img

More like this
Related

பாழடைந்த வீட்டிலிருந்து சிறுமி மீட்பு

கடுமையான முறையில் தாக்குதலுக்கு உள்ளான நிலையில், பாழடைந்த பகுதியில் கைவிடப்பட்டிருந்த சுமார்...

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிக்காரர்கள் கைது!

இஸ்ரேலில் விவசாயம் மற்றும் கட்டுமானத் துறைகளில் அரசாங்க ஆதரவுடனான வேலைகள் வழங்கப்படும்...

“இரண்டு ஆண்டு வலி…” – அனுபமா பரமேஸ்வரன் பகிர்ந்த டாக்ஸிக் உறவு அனுபவம்

“என் வாழ்வில் இரண்டு ஆண்டுகள் நார்சிஸ்டிக் (Narcissistic) கொடுமைகளால் பாதிக்கப்பட்டிருந்தேன்” என...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்