உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் 2025 மே 06 ஆம் திகதி நடைபெறும் என்று தேசிய தேர்தல் ஆணைக்குழு இன்று அறிவித்துள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து நடைபெற்ற சிறப்பு ஊடகவியலாளர் சந்திப்பின் போது இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
மார்ச் 17 ஆம் திகதி தொடங்கிய 336 உள்ளூராட்சி நிறுவனங்களுக்கான வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளல் இன்று மதியம் 12.00 மணிக்கு நிறைவடைந்தது.
இதற்கிடையில், தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் பணி நேற்று (மார்ச் 19) நள்ளிரவில் நிறைவடைந்தது.
தேர்தல் ஆணைக்குழுவின கூற்றுப்படி, இந்த ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மொத்தம் 17,296,330 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1