இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் நாளை, 20 மார்ச் 2025 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இன்று காலை நீதிமன்றத்தில் சரணடைந்த தென்னகோனை மாத்தறை நீதவான் நீதிமன்றம் விளக்கமறியலில் வைத்துள்ளது.
தேசபந்து தென்னகோனின் பிணை மனு மீதான முடிவு நாளை அறிவிக்கப்படும் என்று நீதிமன்றம் மேலும் தெரிவித்துள்ளது.
வெலிகமவில் உள்ள ஒரு பிரபல ஹோட்டலில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக தென்னகோனுக்கு எதிராக திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.
தேசபந்து தென்னகோன் மீது பிடியாணை பிறப்பிக்கப்பட்டதால் அவர் கைது செய்யப்படுவதைத் தவிர்த்து வந்தார்.
தன்னைக் கைது செய்வதைத் தடுக்க உத்தரவிடக் கோரிய அவரது மனுவையும் மேல்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்திருந்தது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1