பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்று (13) அனுராதபுரம் பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவரை 48 மணி நேரம் தடுத்து வைத்து விசாரிக்க பொலிஸாருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அனுராதபுரம் தலைமை நீதவான் நாலக சஞ்சீவ ஜெயசூரிய அந்த உத்தரவைப் பிறப்பித்திருந்தார்.
சந்தேக நபருக்கு அடைக்கலம் கொடுத்த குற்றச்சாட்டின் பேரில் சந்தேக நபரின் சகோதரி கைது செய்யப்பட்டார். வைத்தியரின் கைத்தொலைபேசியை வைத்திருந்த குற்றச்சாட்டில் அவரது கணவரும் கைது செய்யப்பட்டார்.
அதன்படி, இருவரையும் இந்த மாதம் 17 ஆம் திகதி வரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.



