ஹபரணையில் இந்து ஆலயம் உடைப்பு

Date:

ஹபரணையில் இந்து ஆலயத்தின் முன்பகுதி உடைக்கப்பட்டு பேரூந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளமை தமிழ் சமூகத்தவரிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஹபரணையில் அமைந்துள்ள இந்து ஆலயத்தின் முன்பகுதி இடிக்கப்பட்டு அதற்கிடையில் பேரூந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளதோடு, பக்தர்கள் ஆலயத்திற்குள் செல்லும் வழியும் மறிக்கப்பட்டு, அதற்குப் பதிலாக தடுப்பு சுவர் ஒன்று கட்டப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை பெரும் எதிர்விளைவுகளை ஏற்படுத்தியுள்ளதுடன், சமுகத்தினிடையே கடும் எதிர்ப்பையும் தூண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரும்பான்மையினரின் ஆதிக்க போக்கால் சிறுபான்மையினர் அடக்குமுறைக்குள்ளாகுவதாகவும் சமூக ஆர்வலர்கள் வெளிப்படையாக விமர்சித்து வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரப்பூர்வ விளக்கம் வழங்குமாறு அரசாங்கத்தையும், உள்ளூராட்சி அதிகாரிகளையும் மக்கள் கேட்டுக்கொண்டு வருகின்றனர்.

இதே சமயம் யாழில் தையிட்டி விகாரை தொடர்பான முரண்பாடு இடம்பெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் இந்நிகழ்வு பக்கச்சார்பான ஒரு விடயமாக பார்க்கப்படுகின்றது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

யோஷிதவின் பாட்டியின் மனநிலை அறிக்கையை பெப்ரவரியில் சமர்ப்பிக்க உத்தரவு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராக தாக்கல்...

அர்ஜூன, சகோதரர் மீது கொழும்பு உயர்நீதிமன்றத்தில் வழக்கு!

முன்னாள் பெற்றோலிய அமைச்சர் அர்ஜுன ரணதுங்க மற்றும் அப்போதைய இலங்கை பெற்றோலிய...

இறந்தவரின் உடலை சென்று பார்வையிட முடியாத நிலையில் மல்லாவி வைத்தியசாலையின் பிரேத அறை!

முல்லைத்தீவு மாவட்டத்தில் மாந்தை கிழக்கு,துணுக்காய் ஆகிய இரு பிரதேச மக்களின் அரச...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்