யாத்திரிகர் குழுவை ஏற்றிச்சென்ற பஸ் தீப்பற்றி எரிந்ததில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் உடமலுவவில் இடம்பெற்றது.
உடமலுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஜேதவனாராமயவுக்கு அருகிலுள்ள முதியோர் இல்லம் அருகே, இன்று (22) அதிகாலை யாத்திரிகர் குழுவை ஏற்றிச்சென்ற ஒரு பஸ் தீப்பற்றி எரிந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த தீ விபத்தில் எம்பிலிப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 55 வயது நபர் ஒருவரே உயிரிழந்துள்ளார். தீ விபத்திற்கான காரணம் தொடர்பில் இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்படவில்லை.
தற்போது உடமலுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் எனவும், சம்பவத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்புகளை மதிப்பீடு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன எனவும் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



