குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம், ஒரே நாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டு விண்ணப்பிக்கின்றவர்களுக்கு 24 மணி நேரத்திற்குள் சேவை வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
இதற்காக, பதிவு செய்யும் நடவடிக்கை ஒவ்வொரு திங்கட்கிழமையும் காலை 6.00 மணி முதல் வெள்ளிக்கிழமை நண்பகல் 12.00 மணி வரை மட்டுமே மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய நடவடிக்கை விரைவாக கடவுச்சீட்டு பெற விரும்புவோருக்காக அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் செயற்பாடுகள் கடந்த 19ம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டதாகவும், இது குடியகல்வுத் தொடர்பான சேவைகளை விரைவாக வழங்குவதற்காக மேற்கொள்ளப்பட்ட முக்கியமான முன்னேற்றம் என பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




