24 மணி நேரத்திற்குள் கடவுச்சீட்டு இனி

Date:

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம், ஒரே நாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டு விண்ணப்பிக்கின்றவர்களுக்கு 24 மணி நேரத்திற்குள் சேவை வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

இதற்காக, பதிவு செய்யும் நடவடிக்கை ஒவ்வொரு திங்கட்கிழமையும் காலை 6.00 மணி முதல் வெள்ளிக்கிழமை நண்பகல் 12.00 மணி வரை மட்டுமே மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய நடவடிக்கை விரைவாக கடவுச்சீட்டு பெற விரும்புவோருக்காக அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் செயற்பாடுகள் கடந்த 19ம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டதாகவும், இது குடியகல்வுத் தொடர்பான சேவைகளை விரைவாக வழங்குவதற்காக மேற்கொள்ளப்பட்ட முக்கியமான முன்னேற்றம் என பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

போக்குவரத்து பொலிசார் ஒளிந்து நின்று வாகனங்களை மறிக்கக்கூடாது: கண்டிப்பான உத்தரவு!

போக்குவரத்து விதிமீறலுக்காக ஒரு வாகனத்தை நிறுத்த வேண்டியிருக்கும் போது, ​​காவல்துறை உத்தியோகத்தர்கள்...

ஈரானின் அணுசக்தித் திட்டம் அல்ல, எண்ணெய் விலைகளை குறைப்பதே போரில் முதன்மையான முன்னுரிமை: அமெரிக்கா

ஈரான் போரில் அமெரிக்காவின் தற்போதைய முதன்மை முன்னுரிமை அதன் அணுசக்தித் திட்டம்...

பாழடைந்த வீட்டிலிருந்து சிறுமி மீட்பு

கடுமையான முறையில் தாக்குதலுக்கு உள்ளான நிலையில், பாழடைந்த பகுதியில் கைவிடப்பட்டிருந்த சுமார்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்