ஏழு கோள்கள் ஒரே இரவில் : அபூர்வ நிகழ்வு

Date:

சூரிய குடும்பத்தின் ஏழு கோள்கள் ஒரே நேரத்தில் வானில் காட்சியளிக்கும் அபூர்வ நிகழ்வு எதிர்வரும் 28ம் திகதி நடைபெறவுள்ளதாக சர்வதேச வானியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிகழ்வு வானியல் ஆர்வலர்களுக்கு மட்டுமின்றி ஆன்மிக ரீதியாகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இரவு வானில் ஏழு கோள்களையும் ஒரே நேரத்தில் கண்டுகளிக்க முடியும் எனவும், இதில் ஐந்து கோள்களை வெறும் கண்களால் பார்க்கலாம் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

யுரேனஸ் மற்றும் நெப்டியூன் ஆகிய இரு கோள்களை பார்வையிட தொலைநோக்கி பயன்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், ஓகஸ்ட் மாத நடுப்பகுதியில் இதேபோன்ற ஒரு நிகழ்வு மீண்டும் நடைபெற வாய்ப்பு உள்ளதாகவும், அப்போது ஆறு கோள்கள் ஒரே நேரத்தில் பார்வைக்கு வரும் எனவும் வானியல் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

வானியல் ஆர்வலர்கள் இந்த அபூர்வமான நிகழ்வை உறுதியாகக் காணலாம் எனவும் வானிலை ஆய்வாளர்கள் வலியுறுத்துகின்றனர்

Share post:

spot_imgspot_img

More like this
Related

யாழ் கூட்டுறவு சங்கத்தில் குழப்பம்: பொலிசாரை வெளியேறுமாறு வற்புறுத்திய ஊழியர்!

யாழ் கூட்டுறவு சங்க ஊழியர்களது பணிப்புறக்கணிப்பில் குழப்பங்களை கட்டுப்படுத்தச் சென்ற பொலிசாரை...

மதிமுக பொதுச் செயலர் வைகோவை சந்தித்து வாழ்த்து பெற்றார் முதல்வர் ஜோசப் விஜய்

தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய் இன்று மதிமுக பொதுச் செயலாளர்...

முன்னாள் முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார் முதல்வர் ஜோசப் விஜய்

தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய், முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினை அவரது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்