ரயில் மோதி முதியவர் பலி

Date:

ரயிலில் மோதி முதியவர் உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

கொழும்பிலிருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த ரயில், தம்புத்தேகம மற்றும் செனரத்கம ரயில் நிலையங்களுக்கு இடையில் சென்றுக்கொண்டிருந்த போது, ரயில் மோதி சுமார் 65 வயது மதிக்கத்தக்க நபர் உயிரிழந்துள்ளார்.

இன்று (19) அதிகாலை இடம்பெற்ற இவ் விபத்தில், மோதி பலத்த காயமடைந்த அந்த நபர், உடனடியாக தம்புத்தேகம வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டிருந்தார்.

எனினும், அவருக்கு வழங்கப்பட்ட சிகிச்சைகள் பலனின்றி அவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த நபரின் முழு விபரங்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. இதுகுறித்த மேலதிக விசாரணைகளை தம்புத்தேகம பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

திருவான்மியூர் வாக்குச் சாவடியில் முதல் ஆளாக வாக்களித்த நடிகர் அஜித்

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று காலை 7 மணிக்குத்...

உயர் நீதிமன்ற வரலாற்றில் முதல் முறையாக மீனாட்சியம்மன் கோயில் வழக்கில் தமிழில் உத்தரவு

மதுரை மீனாட்​சி​யம்​மன் கோயில் குட​முழுக்கு வழக்​கில் உயர் நீதி​மன்​றம் முதல் முறையாக...

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல்: பலத்த பாதுகாப்புடன் தொடங்கியது வாக்குப் பதிவு

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் வாக்​குப்​ப​திவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது....
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்