புதையல் என கூறி போலி தங்கம் விற்ற பூசகர் கைது

Date:

போலித் தங்கத்துண்டுகள் விற்பனை செய்த பூசகர் உள்ளிட்ட மூன்று பேரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

புதையலிலிருந்து பெறப்பட்டதாகக் கூறப்படும் போலி தங்கத் துண்டுகளை அனுராதபுரத்தில் உள்ள தொழிலதிபர் ஒருவரிடம் கொடுத்து 22.86 மில்லியன் ரூபாயினை மோசடி செய்த குற்றச்சாட்டில் பூசகர், அவரது மனைவி மற்றும் மருமகன் ஆகியோர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் எதிர்வரும் 20ம் திகதி (நாளை) வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

குறித்த சந்தேகநபர்களை இன்றைய தினம் (19) அனுராதபுரம் மேலதிக நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது, இது தொடர்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இச் சம்பவம் தொடர்பில், முன்னதாக குறித்த சந்தேகநபர்கள் பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில், தற்போது அவர்களின் பிணை இரத்து செய்யப்பட்டு, அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.

மேலும், இதே சம்பவத்தில் முன்பே கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபரான பூசகரின் இரண்டு மகன்கள் மற்றும் பேரப்பிள்ளை ஒருவரை எதிர்வரும் 20ம் திகதி (நாளை) வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இந்த வழக்கு தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

பேச்சுக்காக பாகிஸ்தான் புறப்பட்ட அமெரிக்க துணை ஜனாதிபதி

துணை ஜனாதிபதி ஜே.டி. வேன்ஸ் மற்றும் அமெரிக்க தூதுக்குழுவினர், ஈரான் குறித்த...

ஈரான் யுரேனியத்தின் கதி என்னவாகும்?

சுமார் 10 அணு குண்டுகளைத் தயாரிக்கப் போதுமான அளவு அதிக செறிவூட்டப்பட்ட...

விஜய் வேட்புமனுவில் சொத்து மதிப்பை குறைத்துக் காட்டியது முறைகேடானது: உயர் நீதிமன்றம்

இரு தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்த தவெக தலைவர் விஜய்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்