தமிழ் தம்பதி கட்டுநாயக்கவில் கைது

Date:

கனடாவுக்கு தப்பிச் செல்ல முற்பட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழ் தம்பதியினர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறை அதிகாரிகள் மேற்கொண்ட விசேட சோதனையின் போது, போலியான விசாக்களை பயன்படுத்தி ஜப்பான் வழியாக கனடா செல்ல முயன்ற இவர்களை நேற்று (18) கைது செய்துள்ளனர்.

விசாரணையின் போது, குறித்த தம்பதியர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், கணவரின் வயது 40 என்றும், மனைவியின் வயது 34 என்றும் தெரியவந்துள்ளது.

நேற்று இரவு 8.35 மணிக்கு ஜப்பானுக்கு புறப்படும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் UL-454 இல் செல்ல திட்டமிட்டிருந்த நிலையில், கட்டுநாயக்க விமான நிலையத்தில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

2025/26இல் ரூ.200 பில்லியனுக்கு மேற்பட்ட போதைப்பொருட்கள் பறிமுதல்

2025/26 காலத்தில் ரூ. 200 பில்லியனுக்கு மேற்பட்ட போதைப்பொருட்கள் பறிமுதல்: அமைச்சர்...

பிரான்ஸில் முதல் எபோலா நோயாளர் உறுதி

காங்கோவில் ஏற்பட்டுள்ள சமீபத்திய எபோலா பரவலின் பின்னணியில், பிரான்ஸில் முதல் எபோலா...

**கோட்டாபயவின் ரிட் மனு மீதான மேலதிக விசாரணை ஜூலை 6க்கு ஒத்திவைப்பு**

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, 2019 ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்கள்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்