அம்பாறையில் நெல் அறுவடை இயந்திரம் விபத்து

Date:

அம்பாறையில் நெல் அறுவடை செய்யும் இயந்திரம் குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அம்பாறை, கல்முனை பிரதான வீதி தென்கிழக்கு பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்திற்கு அருகில் இன்று (17) நெல் அறுவடை செய்யும் இயந்திரம் குடைசாய்ந்து விபத்துக்குள்ளானது.

உழவு இயந்திரத்தில் ஏற்றிச்செல்லப்பட்டிருந்த குறித்த இயந்திரம் தற்செயலாக நிலை தடுமாறி தரையிலே வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்தினால் உழவு இயந்திரம் மற்றும் நெல் அறுவடை செய்யும் இயந்திரம் ஆகியவை பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

எனினும், குறித்த விபத்தின் போது, எந்த உயிராபத்தும் ஏற்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

spot_imgspot_img

More like this
Related

1 பில்லியன் டொலர் மோசடி! சில வங்கிகள் சிக்கியதாக அதிர்ச்சி தகவல்

நாட்டுக்கு 1 பில்லியன் அமெரிக்க டொலர் இழப்பு; சில வங்கிகளுக்கு தொடர்பு...

ஒரு குடும்பத்தின் அதிகாரத்திற்காக இராணுவம், புலனாய்வு பிரிவின் ஒரு பகுதி செயற்பட்டிருந்தால் தண்டனை வழங்க பின்நிற்கமாட்டோம்: ஜனாதிபதி

ஊழல், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்கள், போதைப்பொருள் வியாபாரிகள், குற்றங்கள் மற்றும் அரசியல்...

பெண் பிசியோதெரப்பிஸ்ட் கழுத்து நெரித்து கொல்லப்பட்டார்!

தெல்தெனிய பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த அம்பாறை வைத்தியசாலையின் பெண் பிசியோதெரப்பிஸ்டின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்