30 மில்லியன் பெறுமதியான கையடக்க தொலைபேசிகள் கட்டுநாயக்காவில் கைப்பற்றல்

Date:

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில், 30 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள கையடக்க தொலைபேசிகள் மற்றும் டெப்லெட் கணினிகளை சட்டவிரோதமாக கொண்டுவர முயன்ற வர்த்தகர் ஒருவர் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு 13, கொட்டாஞ்சேனை பகுதியைச் சேர்ந்த சந்தேகநபர் அடிக்கடி வெளிநாடு சென்று வரும்பவர் என குறிப்பிடப்படுகிறது.

கடந்த பெப்ரவரி 1ம் திகதி மாலை 4.30 மணிக்கு கட்டார் ஏர்வேஸ் விமானம் QR-654 மூலம் இலங்கைக்கு வந்த அவர், தனது பொருட்களை அதே விமானத்தில் கொண்டு வரவில்லை. பின்னர், தனி விமானம் மூலம் பொருட்கள் சுங்க திணைக்களத்திற்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், நேற்று அவற்றைப் பெற்றுக்கொள்ள குறித்த நபர் சென்றபோது அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

இச் சோதனையின் போது, அவரது பொருட்களுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 180 உயர் தர கையடக்க தொலைபேசிகள் மற்றும் 5 டெப்லெட் கணினிகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதனையடுத்து, சுங்க அதிகாரிகளால் குறித்த நபர் கைது செய்யப்பட்டு, இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதால், குறித்த வர்த்தகர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

2026 உயர்தர பரீட்சைக்கு அடையாள அட்டை கட்டாயம்!

இலங்கை பரீட்சை திணைக்களத்தினால் நடாத்தப்படும் பரீட்சைகளுக்கு விண்ணப்பிக்கும் போது, தேசிய அடையாள...

60 வயது கள்ளக்காதலியை கொலை செய்தவருக்கு விளக்கமறியல்!

அலதெனியவின் யதிஹலகல பகுதியில் உள்ள தனது சட்டப்பூர்வ மனைவிக்குச் சொந்தமான வீட்டில்,...

பொன்.சிவகுமார் நினைவு ஏற்பாடு: வலி.கிழக்கு தவிசாளரிடம் பொலிசார் விசாரணை!

பொன் சிவகுமாரனின் நினைவேந்தல் நிகழ்வு ஏற்பாடு தொடர்பில் வலிகாமம் கிழக்கு பிரதேச...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்