இன்று (12) காலை, கிரியுல்ல – மினுவாங்கொட வீதியில், பரவவில பகுதியில் மிகப்பெரிய விபத்து ஒன்று சம்பவித்துள்ளது.
வேகக் கட்டுப்பாட்டை இழந்த ஒரு கார் ஒன்று, எதிரே வந்த வேனை நேரடியாக மோதியதால், கோரத்தமான விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. விபத்தின் விளைவால், காரும் வேனும் மோசமாக சேதமடைந்துள்ளதோடு, பலர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில், சாரதியின் கவனக்குறைவினால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. விபத்தில் பலர் காயமடைந்த நிலையில், அருகிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக பரவவில பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். விபத்து பற்றிய மேலும் தகவல்கள் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது



