ம.பி.யில் நடனமாடிக் கொண்டிருந்த 23 வயது பெண் மாரடைப்பால் உயிரிழப்பு

Date:

நிகழ்ச்சியில் உற்சாகமாக நடனமாடிக் கொண்டிருந்த 23 வயது இளம்பெண் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் மத்திய பிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்தவர் பரினிதா ஜெயின். 23 வயதான இவர், தனது உறவினரின் திருமண நிகழ்ச்சிக்காக இந்தூருக்கு அருகிலுள்ள விதிஷா என்ற பகுதியில் அமைந்துள்ள ரெசார்ட்டுக்குச் சென்றுள்ளார்.

அங்கு நடைபெற்ற நடன நிகழ்ச்சியில் பலர் நடனமாடிக் கொண்டிருந்தனர். இதையடுத்து நடனம் ஆடுவதற்கு ஆசைப்பட்ட பரினிதா, அங்கு இசைக்கப்பட்ட இந்திப் பாடல்களுக்கு நடனமாடிக் கொண்டிருந்தார்.

உற்சாகமாக அவர் ஆடிக்கொண்டிருந்த போதே அவர் திடீரென சுருண்டு கீழே விழுந்தார். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரைத் தூக்கி படுக்கையில் படுக்க வைத்தனர். பின்னர் அவருக்கு முதலுதவி செய்யப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

ஆனால் வரும் வழியிலேயே பரினிதா, மாரடைப்பால் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். எம்பிஏ பட்டதாரியான பரினிதா, இந்தூரின் தெற்கு துகோகஞ்சில் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். பரினிதாவின் தம்பிகளில் ஒருவரும் 12 வயதிலேயே மாரடைப்பால் இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

விசாரணை நாட்களில் நீதிமன்றம் வந்து விட்டு, ஏனைய நாட்களில் ஊர் சுற்றலாம்: நாமலை கலாய்த்த அமைச்சர்!

எதிர்க்கட்சி அரசியல்வாதியான நாமல் ராஜபக்ச, திட்டமிடப்பட்ட திகதிகளில் நீதிமன்ற நடவடிக்கைகளில் கலந்துகொள்ளும்...

இலங்கையில் 25% தனியார் பேருந்துகள் மண்ணெண்ணெயிலேயே இயங்குகின்றன!

இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜெமுனு விஜேரத்ன, நாட்டின்...

அமெரிக்கா- ஈரான் ஒப்பந்தத்தின் 14 அம்ச உள்ளடக்கம் இதுதான்!

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் வெள்ளிக்கிழமை கையெழுத்திடப்படும் என எதிர்பார்க்கப்படும் 14 அம்ச...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்