அங்கொடை சந்தியில் தீ பரவி பெரும் சேதம்

Date:

அங்கொடை சந்தியில் உள்ள கார் உதிரிப் பாகங்கள் பழுதுபார்க்கும் கடையில் ஏற்பட்ட தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

குறித்த கடையில் ஏற்பட்ட தீயானது அருகிலிருந்த மேலும் இரண்டு கடைகளுக்கும் பரவியதில் இரு கட்டிடங்கள் முழுவதும் எரிந்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

தீயணைப்பு வாகனங்கள் வருவதற்கு முன், அப்பகுதி மக்கள் தீயை கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டபோதிலும், தீ வேகமாகப் பரவி பெரும் சேதத்தை ஏற்படுத்தியிருந்தது.

தற்போது, கோட்டே மாநகர சபையிலிருந்து இரண்டு தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளன.

இந்த விபத்தில் ஒரு வீடும் ஒரு கடையும் முற்றிலுமாக எரிந்து சேதமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தீ பரவல் சம்பவத்திற்கான காரணம் இதுவரை அறியப்படாத நிலையில் விசாரணைகள் தொடருகின்றன.

Share post:

spot_imgspot_img

More like this
Related

எரிபொருள் நெருக்கடி: அரச ஊழியர்களுக்கு புதன் கிழமைகளிலும் விடுமுறை!

தற்போது நிலவும் எரிபொருள் விநியோகச் சிக்கல்களைக் கருத்திற்கொண்டு, அதனை எதிர்கொள்ளும் வகையில்...

எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு

‘தமிழ் சிறுகதைகளின் தடங்கள்’ என்ற நூலுக்காக எழுத்தாளர் ச.தமிழ்செல்வனுக்கு 2025-ம் ஆண்டுக்கான...

கியூபாவுடன் பேச்சுவார்த்தை தொடர்கிறது, ஈரானுக்குப் பிறகு நடவடிக்கை சாத்தியம்: டிரம்ப்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஞாயிற்றுக்கிழமை அமெரிக்கா விரைவில் கியூபாவுடன் ஒரு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்