டெங்கு அபாயத்தில் சிக்கி தவிக்கும் மேல் மாகாணம்

Date:

இவ் வருட ஆரம்பம் முதல், 30 நாட்களில் டெங்கு நோயாளர்களாக பதிவாகியுள்ள நோயாளர்களில் மேல் மாகாணத்திலே அதிகளவான நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாட்டில் டெங்கு நோய் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ஜனவரி 1 முதல் 30ம் திகதி வரையான காலப்பகுதியில் 4,761 பேர் டெங்கு நோயாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

குறிப்பாக, மேல் மாகாணத்தில் கொழும்பு, களுத்துறை மற்றும் கம்பஹா மாவட்டங்களில் 2,156 நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், நாட்டில் அதிகளவான தொற்றாளர்கள் இந்த மாகாணத்திலேயே காணப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அத்துடன், வட மாகாணத்தில் 250, மத்திய மாகாணத்தில் 431, மற்றும் சப்ரகமுவ மாகாணத்தில் 394 நோயாளர்கள் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. நாட்டில் டெங்கு தொற்று தொடர்ந்து பரவி வரும் நிலையில், இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 2 டெங்கு மரணங்களும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

காரைதீவு பிரதேச சபையின் “உள்ளூராட்சி வாரம் – 2026” நிகழ்வு ஆரம்பம்

அம்பாறை மாவட்டம், காரைதீவு பிரதேச சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள “உள்ளூராட்சி வாரம்...

மாவடிப்பள்ளி ஆற்றில் கரை ஒதுங்கிய இனந் தெரியாத ஆண் சடலம்

அம்பாறை மாவட்டம், மாவடிப்பள்ளி ஆற்றுப் பகுதியில் இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம்...

பாடசாலை மாணவர்களையும் சென்றடைந்த போதைப்பொருள் – இலங்கையின் எதிர்காலத்திற்கு பெரும் ஆபத்து!

போதைப்பொருள் பாவனை நாட்டை சீரழித்து வரும் நிலையில், அது பாடசாலை மாணவர்களையும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்