திருமலையில் சம்பவம் – நீரில் மூழ்கிய நால்வரில் மூவர் மீட்பு: ஒருவரை தேடும் பணி ஆரம்பம்

Date:

இன்று (30) வியாழக்கிழமை மாலை திருகோணமலை கடற்கரையில் குளித்துக் கொண்டிருந்த போது கடல் அலையின் தாக்கத்தால் நான்கு இளைஞர்கள் நீரில் மூழ்கினர்.

நால்ரில் மூவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதுடன், ஒருவர் காணாமல் போயுள்ள நிலையில் அவரை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

திருகோணமலை சீனக்குடா பகுதியை சேர்ந்த 20வயதிற்கு உட்பட்ட நான்கு நண்பர்கள் திருகோணமலை கடற்கரையில் குளித்துக் கொண்டிருந்தபோது கடல் அலையில் சிக்குண்டு நீரில் மூழ்கியுள்ளனர். இவர்களில் மூவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதுடன் காணாமல் போய் உள்ள 20 வயதான ஒருவரை தேடும் பணியை பாதுகாப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

காப்பாற்றப்பட்ட இளைஞர்கள் மூவரும் திருகோணமலை துறைமுக பொலிஸாரால் அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை திருகோணமலை துறைமுக பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

மின்சாரசபை ஊழியர்களின் வேலை நிறுத்தம் தொடரும் என அறிவிப்பு!

தமது கோரிக்கைகளுக்குச் சாதகமான பதில் கிடைக்கும் வரை தற்போதைய வேலைநிறுத்தப் போராட்டத்தை...

யுவதியின் தங்கச்சங்கிலி அறுத்தவர் மடக்கிப்பிடிப்பு

வென்னப்புவ, வைக்கல், தம்பரவில தேவாலயத்திற்கு அருகிலுள்ள ஒரு துணை வீதியில் மோட்டார்...

பிள்ளையானின் அடிப்படை உரிமை மனு விசாரணைக்கு ஏற்பு!

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன், எந்தவொரு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்