மட்டக்களப்பில் யானை தாக்குதல் – பஸ் சேதம், பயணிகள் பாதுகாப்பில்

Date:

மட்டக்களப்பு ஓட்டமாவடி தியாவட்டவான் பகுதியில் வைத்து யானை ஒன்று பஸ் வண்டியை தாக்கியுள்ள சம்பவம் பதிவாகியுள்ளது.

திருகோணமலையிலிருந்து கல்முனை நோக்கி, கொழும்பு – மட்டக்களப்பு பிரதான வீதியில் பயணித்த தனியார் பஸ் வண்டி மீதே இத்தாக்குதல் நேற்று இரவு (28)மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இக் குறித்த தாக்குதலில் பஸ் வண்டி சேதத்திற்குள்ளாக்கப்பட்டிருந்தாலும், இதன் போது பஸ் வண்டியில் பயணித்த எவருக்கும் சேதங்கள் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

திருகோணமலையிலிருந்து கல்முனை நோக்கி பயணித்து கொண்டியிருக்கையில் குறித்த பஸ் ஓட்டுநர் தியாவட்டவான் பகுதியில் யானை கூட்டத்தினை கண்டதும் பஸ் வண்டியினை நிறுத்தியுள்ளார் அதன்போதே யானை பஸ் வண்டியின் முன் பக்கம் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.

கடந்த சில நாட்களாக குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து அட்டகாசம் புரியும் யானைகளை காட்டுப் பகுதிக்குள் விரட்டும் செயற்பாடுகளில் கல்குடா அனர்த்த அவசர உதவிச்சேவை குழுவினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து செயற்பட்டு வருகின்றன

spot_imgspot_img

More like this
Related

“இரண்டு ஆண்டு வலி…” – அனுபமா பரமேஸ்வரன் பகிர்ந்த டாக்ஸிக் உறவு அனுபவம்

“என் வாழ்வில் இரண்டு ஆண்டுகள் நார்சிஸ்டிக் (Narcissistic) கொடுமைகளால் பாதிக்கப்பட்டிருந்தேன்” என...

இரண்டாவது தேனிலவுக்காக தொழிலதிபரின் ஏரிஎம் அட்டை திருடிய யுவதி கைது!

தனது தேனிலவுக்கு செலவிடுவதற்காக ஒரு தொழிலதிபருக்குச் சொந்தமான ஏடிஎம் அட்டைகளைத் திருடியதாகக்...

மையவாடி பிரச்சினைக்கு மாளிகைக்காடு பள்ளிவாசல்கள் மற்றும் பொது அமைப்புகளின் சம்மேளனத்துடன் பிரதேச சபை கலந்துரையாட வேண்டும் – உப தவிசாளர் இஸ்மாயில்

மாளிகைக்காடு மக்களுக்கான நிரந்தரமான மாற்று மையவாடியை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளை காரைதீவு பிரதேச...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்