மட்டக்களப்பில் யானை தாக்குதல் – பஸ் சேதம், பயணிகள் பாதுகாப்பில்

Date:

மட்டக்களப்பு ஓட்டமாவடி தியாவட்டவான் பகுதியில் வைத்து யானை ஒன்று பஸ் வண்டியை தாக்கியுள்ள சம்பவம் பதிவாகியுள்ளது.

திருகோணமலையிலிருந்து கல்முனை நோக்கி, கொழும்பு – மட்டக்களப்பு பிரதான வீதியில் பயணித்த தனியார் பஸ் வண்டி மீதே இத்தாக்குதல் நேற்று இரவு (28)மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இக் குறித்த தாக்குதலில் பஸ் வண்டி சேதத்திற்குள்ளாக்கப்பட்டிருந்தாலும், இதன் போது பஸ் வண்டியில் பயணித்த எவருக்கும் சேதங்கள் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

திருகோணமலையிலிருந்து கல்முனை நோக்கி பயணித்து கொண்டியிருக்கையில் குறித்த பஸ் ஓட்டுநர் தியாவட்டவான் பகுதியில் யானை கூட்டத்தினை கண்டதும் பஸ் வண்டியினை நிறுத்தியுள்ளார் அதன்போதே யானை பஸ் வண்டியின் முன் பக்கம் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.

கடந்த சில நாட்களாக குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து அட்டகாசம் புரியும் யானைகளை காட்டுப் பகுதிக்குள் விரட்டும் செயற்பாடுகளில் கல்குடா அனர்த்த அவசர உதவிச்சேவை குழுவினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து செயற்பட்டு வருகின்றன

spot_imgspot_img

More like this
Related

அக்கரைப்பற்று பிரதேச சபையின் புதிய உதவித் தவிசாளராக எம்.எச். சுபைதா உம்மா பதவிப் பிரமாணம்

அக்கரைப்பற்று பிரதேச சபையின் புதிய உதவித் தவிசாளராக எம்.எச். சுபைதா உம்மா...

சாய்ந்தமருதில் உணவகங்கள், வர்த்தக நிலையங்களில் சுகாதார பரிசோதனை

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே. மதன் அவர்களின் ஆலோசனை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்