Update – மாவை. சேனாதிராஜா அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி

Date:

இலங்கை தமிழ் அரசுக் கூட்டமைப்பின் தலைவரும் அரசியல் மூத்த தலைவருமான திரு. மாவை சேனாதிராஜா அவர்கள் தற்போது யாழ்.போதனா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் செயற்கை சுவாச உதவியுடன் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இன்று காலை, தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையிலிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தார்.

போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட CT scan பரிசோதனை மூலம் அவரது தலையில் கணிசமான அளவில் இரத்தப் பெருக்கு இருப்பதை வைத்திய நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர்.

மூளையில் ஏற்பட்ட இரத்தக் கசிவினால் ஆபத்தான நிலையில் உள்ள அவருக்கு, தற்போது நிபுணர்களின் கண்காணிப்பில் தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக யாழ் வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

விசாரணையென்றதும் எகிறியதா இதயத்துடிப்பு?: மலைவிழுங்கி மகாதேவனின் மனைவியின் சிங்கப்பூர் திருகுதாளம் அம்பலம்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ, கொழும்பு நிதிக்குற்றப் புலனாய்வுப்...

நாகப்பட்டினம் – காங்கேசன்துறை படகுச் சேவைக்கான நிதியுதவி இந்தியா மீண்டும் நீட்டித்துள்ளது

நாகப்பட்டினம் மற்றும் காங்கேசன்துறை இடையிலான பயணிகள் படகு சேவைக்கான நிதியுதவியை இந்திய...

வீடு மாறி குண்டடித்த இருவரும் கைது!

தெஹிவளை, சிரிசங்கபோ மாவத்தையில் உள்ள ஒரு வீட்டில் கைக்குண்டு வீசப்பட்டதில் இரு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்